Friday 1 March 2013

ஜீவாமிர்தம்

                                                                  ஜீவாமிர்தம்
 வணக்கம் .
பல் வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பின் நாம் செய்ய வேண்டியது ஜீவமிர்த்த கரைசல் இடுவது அவசியம் ஆகும் . இதனால் செலவும் குறைவு மண்ணும் வளமாகும் .
ஜீவாமிர்தம் என்றால் என்ன ?
மண்ணில் உயிர் சத்தை அதிகரிக்கும் கரைசல் ஜீவாமிர்தம் ஆகும் இதை இடுவதால் 15 அடி ஆழத்தில் உள்ள மண்புழுவும் எழுந்து வரும் என்பது உறுதி 
ஜீவாமிதம் தயாரிக்கும் முறை :-
சாணி 10 கிலோ 
கோமியம் 10லிட்டர் 
வெல்லம் 2 கிலோ 
கொள்ளு 1 கிலோ 
பாசிபயறு 1 கிலோ 
(தானியத்தை பவுடராக அல்லது முளை கட்டி அரைக்க  வேண்டியது முக்கியம் )
இவற்றுடன் 1கிலோ நல்ல ஜீவன் உள்ள மண் (கரம்பை )
இவை அனைத்தையும் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கிண்டி விடவேண்டும் ஒரு நாளைக்கு 3 முறை என்ற அளவில் இரண்டு நாள்கள் கழித்து பயன் படுத்த வேண்டும் இதுவே ஜீவாமிர்தம் ஆகும் .
பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-
1 ஏக்கருக்கு 200லிட்டர் கரைசல் இதை பாசன நீருடன் கலந்து விட வேண்டும் .இதை குறுகிய கால பயிர்ருக்கு 20 நாளுக்கு 1 முறையும் நீண்ட கால பயிருக்கு மாதம் 1முறை என்ற அளவில் பயன் படுத்த வேண்டும்  

2 comments:

  1. //20 அடி ஆழத்தில் உள்ள மண்புழுவும் எழுந்து வரும்//

    ஏம்மா, இது கொஞ்சம் அதிகப்படியாத் தெரியலயா?

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_17.html

    ReplyDelete