Thursday 5 July 2012

விளம்பரம்

பஞ்சகவ்யா என்றால் என்ன ?

பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து  வகைப் பொருள்களைக் கொண்டு தயார் செய்வது ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு நல்ல பயிர்  வளர்ச்சி ஊக்கியாக  செயல் படுகின்றது .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-

தொட்டி செடி என்றால் பத்து தொட்டிக்கு 10ml பஞ்சகவ்யா உடன் 300ml தண்ணீர் சேர்த்து அதனுடன் 5ml பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் .

தசகவ்யா என்றால் என்ன ?

9 வகையான தாவிர இலைகளை பசுவின் கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுக்கும் திரவம் ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். செம்பருத்தி செடியில் உள்ள மாவுப் பூச்சி, ரோஸ் செடியில் உள்ள பச்சை புழு மற்றும் இலை சுருட்டு புளுகளையும் கட்டுப்படுத்தும் .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-


ஒரு செடிக்கு 10ml தசகவ்யாவை 200ml தண்ணீர் சேர்த்து  அதனுடன் 1ml  பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சிறிது  சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் . (சாம்பு ஒரு ஓட்டும் திரவமாக செயல் படும் ) தேவைக்கு தக்க பூச்சி மருந்தின் அளவை அதிகரிக்கலாம் .

விளம்பரம்

மண்புழு உரம் என்றால் என்ன ?

பசும் சாணம் மற்றும் இலை தழை கழிவுகளை மக்க வைத்து மண்புழுவிற்கு உணவாக கொடுக்க வேண்டும் . அதை உண்டு மண்புழு வெளியேற்றும் கழிவே மண்புழு உரமாகும் .

பயன்கள் :-

 பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.


உபயோகிக்கும் அளவு :-

சிறிய தொட்டிக்கு 200 கிராம் அளவும் பிரியா தொட்டிக்கு 300 கிராம் அளவும் 2 மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.
தென்னை, மா  முதலிய மரத்திக்கு 5 கிலோ அளவில் வருடத்திற்கு நான்கு  முறை பயன்படுத்த வேண்டும் .

உபயோகிக்கும் முறை :-

செடி அல்லது மரத்தின் வேர் பகுதியில் உள்ள மண்ணை சிறிது அகற்றிவிட்டு உரத்தினை போட்டு பின் மண்ணை மூடிவிடவேண்டும் . ராசி மண்புழு உரத்தில் நுண்ணுயிரிகள் அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி  பட்டு அவை பாதிப்பு அடையாத வரு வேர்கள் மண்புழு உரத்தின் அணைத்து சத்துக்களையும் கிரைகித்து  கொள்ள இந்த மண் மூடாக்கு அவசியம் .