Monday 11 February 2013

பல்வகை பயிர் தொழில் நுட்பம்

வணக்கம் அன்பர்களே ,
உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது . தற் சமயம் நெல் அறுவடை நடந்து கொண்டு உள்ளது . நாங்கள் செய்த பயிர்  தொழில் நுட்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் . இது வரை ரசாயனம் பயன்படுத்தி வந்த வயல் என்பதால் மிகவும் உயிர் சத்து இல்லாமல் இருந்தது அதை இயற்கை விவசாயம் மாற்றி தந்து விட்டது அந்த தொழில் நுட்பம் என்ன வென்றால் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பல்வகை பயிர் தொழில் நுட்பம்   ஆகும் .

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்றால் என்ன ?

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்பது 16 வகை தானியங்களை வயலில் விதைத்து அதை 45 நாட்களில் (பூக்கும்  பருவத்தில் ) மடக்கி உள  வேண்டும் அவ்வாறு செய்யும் போது தளை சத்து மண்ணில் அதி கறிக்கும் மேலும் பயறு வகை பயிர் களின் வேர் முடிச்சு களில் உள்ள ரைசோபியம் மண்ணில் உள்ள பாஸ்பரசை பயிர் களுக்கு எடுத்து கொடுக்கும் .எனவே பயிர் சிறப்பாக வளர்கிறது .

பல்வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தும் தானிய வகைகள் :-

தானியப் பயிர் 4

சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயறு வகை பயிர் 4

உளுந்து 1 கிலோ
பாசிபயறு 1 கிலோ
தட்டைபயறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4

எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரிய காந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர் கள்  4

தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பு 2 கிலோ
நரிபயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப் பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4 கிலோ
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில்  மடக்கி உள வேண்டும்
மேலும் கடைசி உளவின் போது 200 கிலோ வேப்பன் கொட்டையை இடித்து வயலில் துவ வேண்டும்
இவ்வாறு செய்யும் போது வேர்புழு தாக்கம் குறையும் .





.