Sunday 30 September 2012

                            வாழை சாகுபடி தொழில் நுட்பம்
ராகம்:-
பூவன் , நேந்திரன் , ரஸ்தாளி , ரோபஸ்டா ,மோரிஸ்   , செவ்வாழை ,  திசு வாழை .
பட்டம் :-
கார்த்திகை, மார்கழி
பயிர் இடைவெளி :-
ரோபஸ்டா:-
6 க்கு 6 அடி ஒரு ஏக்கருக்கு 1210 கட்டைகள்
மோரிஸ் :-
5.5 க்கு 5.5 அடி ஒரு ஏக்கருக்கு 1440 கட்டைகள்
செவ்வாழை :-
8 க்கு 8அடி ஒரு ஏக்கருக்கு 700 கட்டைகள் .
பூவன் :-
7 க்கு 7 அடி ஒரு ஏக்கருக்கு 900 கட்டைகள் .
கட்டைத்  தேர்வு :-
ஈட்டி இலை , நோய் தக்கதது 9 முதல் 12 பட்டையுடைய கன்று இருக்க வேண்டும் .
கட்டையின்  அளவு :-
1.5 முதல் 2.5 கிலோ
கட்டை நேர்த்தி :-
ஒரு கட்டைக்கு 10 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் 200 லிட்டர் பேரலில் நீர் சேர்த்து கலந்து கட்டையை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து நடவு செய்யலாம் .
நிலம் தயாரித்தல் :-
3 முதல் 5 உழவுகள் போடவேண்டும் .
தொழு உரம் :-
10 டன் அல்லது 1 டன் மண்புழு உரம்
நடவு முறை :-
ஒரு அடி குழி எடுத்து அதில் 100 கிராம் மண்புழு உரம் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லி என்ற அளவில் குழியில் இட்டு அதில் கட்டையின்  கிழங்கு பகுதியில் இருந்து மேலாக 20 செ .மீ  உயரத்தில் வெட்டிய கட்டையை  குழியில் வைத்து மண்ணைப் போட்டு  நன்றாக மிதித்து விடவேண்டும் .
ஊடுபயிர் :-
ஊடு பயிராக பயறு வகை பயிர்கள் கொத்த மல்லி விதைத்து குறைந்த காலத்தில் (40 நாள் ) அதிக லாபம் பெறலாம் . மண்ணில் தழைச் சத்தை அதிகப் படுத்த பசுந்தாள் விதைகளான சணப்பு , நெட்டி போன்றவைகளை விதைத்து 30 நல கழித்து களை கொத்தி கொண்டு கொத்துவதல் மண்ணின் வளம் கூடும் . களையையும் கட்டுபடுத்தலாம் . மேலும் வாழைக்கு தேவையான தழைச் சத்தும் கிடைக்கும் .
களை நிர்வாகம் :-
நடவு செய்த 30 ஆம் நாள்முதல் களையும் தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை களை  வெட்ட வேண்டும் .
உயிர் உரம் :-
நடவு செய்த 30 ஆம் நாள் 1வாழை கட்டைக்கு 100 கிராம் மண்புழு உரம் என்ற அளவில் போட வேண்டும். அத்துடன் பழக்காடி கரைசல் 100 மில்லி ஊற்றவும் .
உர நிர்வாகம் :-
30 ஆம் நாள் மரம் ஒன்றிக்கு 30 மில்லி பஞ்ச கவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து  கன்று மேல் ஊற்றவும் .
60 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி முட்டை கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
90 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி மீன் அமினோ அமிலத்தை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
15 நாளுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்த்த கரைசலை 1 ஏக்கருக்கு தண்ணீருடன் சேர்த்து பாய்ச்ச   வேண்டும் .
5 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 மில்லி பஞ்சகவ்யாவை  1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
6 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 பழக்காடி கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
நீர் நிர்வாகம் :-
தண்ணீர் தேங்கக் கூடாது தண்ணீர் நின்றால் பூஞ்சான  நோய் தாக்க வாய்ப்பு உள்ளது . ஆனால் வயலில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
பின் செய் நேர்த்தி :-
மாதம் ஒரு முறை மண் அனைத்தால் நல்லது இலைப்  புள்ளி நோய் பரவுவதைத் தடுக்க காய்ந்த மற்றும் நோயுற்ற இலைகளை அவ்வப்போது நீக்க வேண்டும் .
கிழங்கு கூன்வண்டு தாக்குதல் :-
அறிகுறி :-
மரத்தில் கருப்பு அல்லது செம்பழுப்பு துளைகள் காணப்படும் . இத் துளைகளில் சருவடிந்து நாளடைவில் மரம் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை:-
1 லிட்டர்   தண்ணிரில் 100 மில்லி அக்னி  அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற  வேண்டும் .
கண்ணாடி இறக்கை பூச்சி  தாக்குதல் :-
அறிகுறி :-
இப் பூச்சி  இலையின் அடியில் இருந்து சாறினை உறிஞ்சுவதால் இலையின் மேல்புறம் வேன்மையன் புள்ளிகள் காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
பொன்னிம்  கரைசல் 20 மில்லி 1 லிட்டர் தண்ணீருடன்  கலந்து தெளித்து கட்டுபடுத்தலாம் .
வாடல் நோய் தாக்குதல் :-
5,6 மாத வாழை மரங்களில் இந்நோய் தாக்கும் தாக்கப்பட்ட வாழை இன் இலை விளிம்புகள் மஞ்சள் நிறம் மடையும் 8 அல்லது 9 மாதங்களில் இந்நோய்  தாக்க
கூடிய மரங்களின் இலை ஒடிந்து தொங்கி விடும். மரத்தின் அடியில் ஒரு வித துர் நாற்றம் வீசும் மண்ணை தோண்டிப் பார்த்தால் கிழங்கு அழுகி இருக்கும்.
கட்டுபடுத்தும் முறை :-
2 வது 4 வது 6 வது மாதத்தில்  வாழை மரத்தின் கிழங்கு பகுதி நனையுமாறு 100 மில்லி தசகவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து வயல் ஈரம் இருக்கும் பொழுது ஊற்ற வேண்டும் .
முடி கொத்து  நோய் :-
அறிகுறி :-
இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் சிறுத்து காணப்படும் மரத்தின் வளர்ச்சி குன்றி இருக்கும் இலையின் ஓரங்களை மடக்கினால் படபட வென ஒடியும் இந்நோய்  தாக்கப் பட்ட மரங்களில் குலை தள்ளாது . இவை அசுவினி மூலம் பரவுகிறது .
கட்டுபடுத்தும் முறை:-
நோய் தாக்கிய வாழையை கிழங்குடன் அகற்றி விட வேண்டும். குழி யில்  1 கிலோ சுண்ணாம்பு இட்டு மூட வேண்டும். அக்னி அஸ்திரம் 50 மில்லி
1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நடவு செய்த 3 வது மதம் முதல் குலை தள்ளும் வரை 45 நாள் இடைவெளியில் அடி மரத்தில் ஊற்ற வேண்டும் .
இலைக் கருகல் நோய் :-
அறிகுறி :-
வாழையில் சிறிய இளம் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி பின் பழுப்பு நிறமடையும்.
கட்டுப் படுத்தும் முறை :-
1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி  பொன்னிம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும் .
காஞ்சார நோய் தாக்குதல் :-
அறிகுறி :-
இலைகள் பழுத்து புள்ளிகள் விழுந்து காய்ந்து வலுவிழந்து காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
60 முதல் 70 சதம் காய்ந்த இலைகளை அறுத்து எடுத்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும் .
அறுவடைத் தொழில் நுட்பம் :-
முற்றிய காய்கள் இளம் மஞ்சள் நிறமாக தெரியும் போது அறுவடை செய்யலாம் .
முக்கியக் குறிப்பு :-
வாழை இலையின் கடைசி சீப்பு வந்த உடன் அதன் நுனியில் பூவை ஒடித்து விட வேண்டும். அதனால் காய் விரைவில் முதிர்ச்சி அடையும் .
15 நாளுக்கு 1 முறை ஜீவமிர்தம் பழக்காடி கரைசல் மாற்றி மாற்றி குலை வரும் வரை நீர் பாசனத் துடன் கலந்து  விட்டால் நிலம் செழிப் படையும் .
சித்த கத்தி மரத்தை வாழை தோட்டத்தை சுற்றி நட்டால் அது காற்று தடுப் பானாக செயல்பட்டு காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும் .
25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6 ஆம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி  தாக்கம் கட்டுப்படும் .
வாழை பூ ஒடித்த உடன் சிறு பிளாஸ்டிக் பையில் 5 மில்லி பஞ்சகவ்யா வில் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டினால் காயின் பருமன் கூடும் .
அல்லது குலை மேல் பஞ்ச கவ்யா கரைசல் தெளிக்க வேண்டும்.

2 comments:

  1. நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. நேர்த்தியான எழுத்துக்கள்..

    ReplyDelete